பொன்மொழிகள்
 
 குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.
 
 - நெப்போலியன் போனபார்ட்.
 
     மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.
 
 - ஷோபா டே
  
 
     அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.
 
 - அரிஸ்டாட்டில்.
 
     நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.
 
 - வைரமுத்து.
 
     பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.
 
  - ஜெனீக்கா.
 
     வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.
 
 - கவிதாசன்.
 
     அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்
 
 - பப்ளியஸ்ஸிரஸ்.
 
     ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
 
 - ஹோம்ஸ்.
 
     உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.
 
 - கதே.
 
     நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.
 
 - பிளினி.
 
     வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.
 
 -அன்னிபெசண்ட்.
 
     தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.
 
 - சுவாமி சுகபோதானாந்தா.
 
     சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
 
 -புல்லர்.
 
     கடவுள் குணமளிக்கிறார். மருத்துவர் பணம் பெறுகிறார்.
 
 -பிராங்க்ளின்.
 
     சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.
 
 - ராமதாசர்.
 
     வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.
 
 - ஹாப்பர்.
 
     மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.
 
 - சைரஸ்.
 
     மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.
 
 - மாத்யூஸ்.
 
     சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.
 
 - ஆரோன்புர்.
 
     அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.
 
  - ஜேம்ஸ் ஆலன்.
 
     உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.
 
 - எமர்சன்.
 
     முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
 
 - யூரிபிடிஸ்.
 
     விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.
 
 - வால்டேர்.
 
     சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.
 
 -கன்பூசியஸ்.
 
     எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.
 
 - கெம்பில்.
 
     அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்.
 
No comments:
Post a Comment