மனதைத் தொட்ட வரிகள் !!!
 Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி 
 Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் 
ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு
 நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். -கவியரசு கண்ணதாசன் 
 
 Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.
 - வால்டேர் 
 Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு 
குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் 
-நெப்போலியன் 
 Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது 
வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் 
முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட் 
 Ø பெண்களில் இரண்டே 
பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் 
என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் -பெர்னாட்ஷா 
 Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. - ஹாபர்ட். 
 Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை! - பாலஸ்தீனப் பழமொழி 
 Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் 
குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
 -ப்ரெட்ரிக் நீட்சே 
 Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை 
பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை 
பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை 
பிரார்த்தனை செய்யுங்கள். - வின்ஸ்டர் லூயிஸ் 
 Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான் 
 Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும் 
 Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் 
 Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த கரியத்தில் நிலையாக இருத்தல் 
 Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் 
 இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 
 Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! 
 Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே! 
 Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை 
 Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை! 
 Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது. 
 Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை. 
 Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் 
மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் .
 
No comments:
Post a Comment