Wednesday 29 February 2012


வடை போச்சே....

 
இன்று தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இது பழைய செய்தி...

பார்க்காதவர்களுக்கு இது புதிய செய்தி..ஒரு அதிசய மற்றும் அதிர்ச்சியான செய்தியும் கூட..

NASA-விஞ்ஞானிகள் நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான அறிகுறியை கண்டார்கள்..

இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில் அது மனித உடல்தான் என உறுதி படுத்தியிருக்கிறார்கள்...அதன் வயது 2 நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் தெரிகிறது


இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது..உடனே உலக விஞ்ஞானிகள் அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது..

நிலவில் தண்ணீர் இருந்ததை உலகிற்கு முதன்முதலில் கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய விஞ்ஞானிகளின் பெரு முயற்சியால் இறந்த உடல் நிலவில் இருந்த்தற்கான புதிர் விடுபட்டிருக்கிறது.

இறந்து கிடந்த உடல் ஒரு வயதான பெண்மணியின் உடல் என இந்திய விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

மனிதர்களே நிலவுக்கு போக பிரம்மபிரயத்தனம் பன்ன‌வேண்டியிருக்கும் இந்த காலத்தில் இந்த பாட்டி எப்படி ந்லவுக்கு போனார்கள் என்று விஞ்ஞானிகள் மூளையை கசக்கிகொண்டிருக்கையில்..

அனைவரையும் உலுக்கிய அந்த உண்மை புலப்பட்டது..

அந்தப் பாட்டி வேறு யாருமல்ல...
 நிலவில் வடை சுட்டுக்கொண்டிருந்த ஆயா பாட்டிதான்  அது..

இதைக்கேட்டவுடன் காலயிலிருந்தே மனசு சரியில்லை...



Join Only-for-tamilவடை போச்சே.... Join Only-for-tamil

EIGHT WAYS FOR HAPPINESS












8. Eighth, every morning and evening, devote 15 minutes to INTROSPECTION. In the morning, 10 minutes should be spent on stilling the mind and then five in listing things you have to do that day. In the evening, five minutes to still the mind again, and ten to go over what you had undertaken to do.
பொன்மொழிகள்

குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில்தான் தங்கியிருக்கிறது.

- நெப்போலியன் போனபார்ட்.

    மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன.

- ஷோபா டே


    அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.

- அரிஸ்டாட்டில்.

    நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

- வைரமுத்து.

    பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.

 - ஜெனீக்கா.

    வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம்.

- கவிதாசன்.

    அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்.ஒழுக்கத்தை நம்பியிருங்கள்

- பப்ளியஸ்ஸிரஸ்.

    ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.

- ஹோம்ஸ்.

    உண்மை மனிதனுக்குச் சொந்தம். பிழை அவன் காலத்திற்குச் சொந்தம்.

- கதே.

    நம்பிக்கை என்பது கண் விழித்திருக்கும் போதே காண்கிற கனவு.

- பிளினி.

    வலிமை, துணிவு, உண்மை, தன்னடக்கம், மரியாதை உள்ளவனே உண்மை வீரன்.

-அன்னிபெசண்ட்.

    தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை.

- சுவாமி சுகபோதானாந்தா.

    சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.

-புல்லர்.

    கடவுள் குணமளிக்கிறார். மருத்துவர் பணம் பெறுகிறார்.

-பிராங்க்ளின்.

    சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.

- ராமதாசர்.

    வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாகி விடுகிறது.

- ஹாப்பர்.

    மிக அதிக உயரத்தை அடைய விரும்பினால் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கு.

- சைரஸ்.

    மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.

- மாத்யூஸ்.

    சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம்.

- ஆரோன்புர்.

    அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அதிக மனமின்மை.

 - ஜேம்ஸ் ஆலன்.

    உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர்ந்த வெற்றி எதையுமே சாதிக்க முடியாது.

- எமர்சன்.

    முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.

- யூரிபிடிஸ்.

    விரைவிலே புகழ் பெற்றவன் பெயரை காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரம்தான்.

- வால்டேர்.

    சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது.

-கன்பூசியஸ்.

    எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன.

- கெம்பில்.

    அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்.
 
சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.


அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:


கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

--
சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு!....
பெண்களின் மனம் - அவர்களுக்கே
புரியாத ஒன்று
பாவம் அதில் எப்படி கிடைக்கும் - ஆண்களுக்கு
இடம் ஒன்று
அதனால் அவர்கள் மனம்
புரிதலே நன்று!!
சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு!....

*வித்யா : *என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?
*நித்யா:* வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர்
பண்ணாங்க
இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை
செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

*வித்யா :* என்ன குழப்பம்?
*நித்யா :* நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப
எல்லாம்
சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல
யாரை
செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான்  சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு
கொஞ்சம்
சஜஷன் சொல்லு.

*வித்யா :* சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.
*வித்யா : *மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு
பில்ட்
அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில
ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து
கொடுத்துட்டு
சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க
மாட்டாரு.
எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி
முடிக்கனும்னு
சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய்
ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும்
ஒத்துக்க
மாட்டாரு.

*வித்யா: *ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து
இருக்கறவரு
டெஸ்ட் இஞ்சினியரு.

*நித்யா: *இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை
மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு
நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு.
நல்லா
இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது
தான் உன்
வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

*வித்யா: *அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு
பெர்ஃபார்மன்ஸ்
டெஸ்ட் இஞ்சினியராம்.

*நித்யா :* இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய
இவ்வளவு
நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு
பார்க்க
மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு
சத்தம்
போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு
சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ
மேக்
அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

*வித்யா:* அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?
*நித்யா:* யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு
இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

*வித்யா:* அவுங்களை பத்தி சொல்லேன்.
*நித்யா:* நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க.
நாம
பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற
பிரச்சனை
என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம்
தங்கவேல்
பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும்
தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப
நல்லவனு"சொல்லனும்.
அவ்வளவு தான்.

* வித்யா:* இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை
தேடிடுவோம்.


உஷாரா இருங்கள்

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(28). இவர் இலங்கையைச் சேர்ந்த சரோஜினி தேவி(35) என்பவரை பேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவக்குமார், மதுரைக்கு கிளம்பி வருமாறும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் சரோவிஜியிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் மதுரை கூடல்அழகர் பெருமாள் கோயிலில் 10.12.2011 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் சம்பாதிப்பதற்காக சிங்கப்பூர் சென்று இருவரும் குடியேறி உள்ளனர். அங்கு சரோஜினியின் ஐபோன், ஐபேர்ட், விசா கார்ட், லேப்டாப் ஆகியவற்றை திருடுக் கொண்டு சிவக்குமார் தலைமறைவாகி உள்ளார். மேலும் போலி பெயர்களில் சரோஜியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட சிவக்குமார், சரோஜினியை மிரட்டி உள்ளார். இது தொடர்பாக மதுரை கமிஷ்னரிடம் சரோஜினி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

plz takecareeeeeeeeeeee

Tuesday 28 February 2012

ஜோக்ஸ்
 
போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
------------------------------------------------------------------------
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.
அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
------------------------------------------------------------------------
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
------------------------------------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
------------------------------------------------------------------------
பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?
நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!
------------------------------------------------------------------------
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"
------------------------------------------------------------------------
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
------------------------------------------------------------------------
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
------------------------------------------------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
------------------------------------------------------------------------
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
------------------------------------------------------------------------------
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
------------------------------------------------------------------------------
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
------------------------------------------------------------------------------
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
------------------------------------------------------------------------------
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


சிரிங்க சிரிங்க

1 “தமிழ்  மொழியை  விட  அழகான  மொழி  எது?”
“உங்க  பொண்ணு  தேன்  மொழி  சார்!”

2. “உங்க  தோட்டத்து  காய்கறிகளுக்கு  மட்டும்  டபுள்ரேட்  சொல்றீக்களே, ஏன்?”
“தண்ணி  பாய்ச்சறது  கூட  வயலுக்கு  மினரல்  வாட்டர்தான்...!”

3. “அமைச்சரே!  நமது  நாட்டின்  ‘குடிமக்கள்’  எப்படி  இருக்கிறார்கள்?”
“போதையில்தான்  மன்னா!”

4. “உன்  கடைசி  ஆசை  என்ன?”
“இந்த  வழக்குல  உண்மைக்  குற்றவாளியை  எப்படியாவது  கண்டுபிடிச்சு  எனக்குக்  காண்பிங்க  எசமான்!”

5. “என்னது,  மன்னருக்கு  மாரடைப்பா?  எதனால்...?”
“சுயம்வரத்துக்குப்  போனவரை  அந்நாட்டு  இளவரசி  ‘மன்னா’  என்று  அழைக்காமல்  ‘அண்ணா’  என்று  அழைத்துவிட்டாளாம்...!”

6. “மன்னா,  ஆபத்து...  ஆபத்து  வந்துவிட்டது...!”
“என்ன  ஆனது,  மாறவர்மன்  நம்  மீது  படையெடுத்து  வருகிறானா?”
“இல்லை  மன்னா,  தாய்  வீட்டுக்கு  போன  மகாராணி  அதற்குள்ளாகவே  திரும்பி  வந்துவிட்டார்...!”

7. “என்ன,  மகாராணிக்கு  திடீரென்று  அலங்காரம்  செய்கிறீர்கள்...?”
“மன்னா, ‘பட்டத்து  யானையை  அலங்கரியுங்கள்’  என்று  நீங்கள்  தானே  ஆணையிட்டீர்கள்...!”

8. “தூங்கிக்கொண்டிருந்த  புலியை  எதிரி  நாட்டு  மன்னன்  ஓலை  அனுப்பி  உசுப்பி  எழுப்பிவிட்டான்...”
“இப்போது  என்ன  செய்யப்  போகிறீர்  மன்னா?”
“சாப்பிட்டுவிட்டு  மறுபடியும்  தூங்க  வேண்டியதுதான்!”

9. “மன்னா!  அரசாங்க  ரகசியத்தை  இந்த  ஒற்றன்  அறிந்து  கொண்டான்...”
“நான்  சமையலறையில்  மகாராணிக்கு  உதவியாக  காய்கறி  அரிந்துகொண்டிருந்ததை  இவன்  பார்த்துவிட்டானா...?”

10. “மன்னா,  எதிரி  நாட்டு  மன்னனிடமிருந்து  போர்ச்  செய்தி  வந்துள்ளது... என்ன  பதில்  அனுப்புவது...?”
“நீங்கள்  அனுப்பிய  ஓலை  எமக்கு  கிடைக்கவில்லை,  என்று  பதில்  ஓலை  அனுப்பிவிடலாமா...?”

11. “மன்னா,  உங்களைப்  பாட  புலவர்  வந்திருக்கிறார்...!”
“இப்போதுதான்  மகாராணியிடம்  பாட்டு  வாங்கி  வந்தேன்!”

12. “டாக்டர்  ஹார்ட்  ஆபரேஷனுக்கு  எதுக்கு  கோடாரி,  கடப்பாரை  எல்லாம்  எடுத்துட்டு  வர்றீங்க...?”
“நீங்க  ஒரு  கல்செஞ்சக்காரர்னு  சொன்னாங்க...”

13. “தலைவர்  ஒரு  துறவி  மாதிரின்னு  எப்படி  சொல்றே?”
“ஆமா...  நேர்மை,  நாணயம்,  மனசாட்சி  எல்லாத்தையும்  துறந்துட்டாரே”

14. “மன்னா!  புலவர்  எழுதிய  பாட்டில்  உங்களைப்   புகழ்ந்து  தானே இருக்கிறது.  ஏன்  கோபப்படுகிறீர்கள்?”
“அமைச்சரே!  ஓலையின்  கீழே  பாருங்கள். ‘மேலே  கூறியவை  முழுக்க, முழுக்க  கற்பனையே!  யாரையும்,  எவரையும்  குறிப்பிடுபவை  அல்ல’னு எழுதியிருக்கே!”

15. “அந்த  பாகவதர்  சினிமா  ரசிகர்னு  எப்படி  சொல்றே...?”
“தகதிமிதா-னு  பாடாம,  ‘தகதகநமீதா’னு  பாடறாரே...!”

16. “நான்  லவ்  பண்றது  தெரிஞ்சா,  அப்பா  என்  கையில  சூடு  வைப்பார்!”
“இப்படி  கூட  செய்வாங்களா?”
“இங்க  பாருங்க...  ஏற்கனவே  அஞ்சு  தடவை  சூடு  வாங்கியிருக்கேன்!”
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான  கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால்  அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
 
கரைக்கு வந்த அவன்  அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.அங்கு இருந்த ஒரு துறவி,''அய்யா,நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?''என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார்,''அய்யா,உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''
 
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
             
 ----இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.
"அம்மாடா...!".

நண்பர் ஒருவர் எழுதிய அருமையான கதை!!

சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. உங்க அம்மா என்ன எப்ப மனுஷியா மதிச்சிருக்காங்க. கல்யாணம் ஆன நாள்ளேந்து நான் அனுபவிக்காத கஷ்டம் இல்ல. ஒரு நல்ல குடும்பத்தில மருமகளாகப் போறேன்னு சந்தோஷத்தில் உங்க வீட்டு வாசப்படிய மிதிச்சேன். ஆனா நடந்த்து என்ன? என்னிக்கு காலடி எடுத்து வச்சேனோ அன்னிலேந்து என் வாழ்க்கை சூனியமாப் போச்சு. நல்ல வேளை உங்க கண் பார்வையிலயே எல்லாம் நடந்ததாலே என் மேல எரக்கப்பட்டு தனியாக் கொண்டு வந்து வச்சிங்க. இப்ப நமக்கென்ன கொறச்சல். உங்கள நான் நல்லவிதமாத் தானே கவனிச்சிக்கிறேன். நானும் எல்லாத்தையும் மறந்துட்டு ரெண்டு வருஷமா உங்க கூட சந்தோஷமா இருக்கேன். இப்ப எதுக்கு பழச கிளறுறீங்க. இப்படியே விட்டுடுங்க. இனி அதப்பத்தி பேச வேணாம்

“அதெல்லாம் பழைய கதை. இன்னுமா நெனச்சிட்டிருக்க. இப்ப அம்மா எந்த நெலயில இருக்காங்க பாரு

ஆமா உடம்பு சரியில்ல. வயசாயிடுச்சு. எல்லாம் விழுந்துருச்சு. உலகத்துல நடக்குறது தான். எனக்கும் அப்படித்தான் ஆவும். உங்களுக்கும் அப்படித்தான்  இதுல என்ன புதுமை. ஆடுனதுக்கெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்

என்ன அப்படி ஆடிட்டாங்க. போனாப் போறதுன்னு நானும் பொறுத்துப் பொறுத்துப் போறேன். வாய் ரொம்ப நீளுது. நான் சொல்லிட்டிருக்கிறது என் அம்மாவைப்பத்தி. எங்களை கரை சேர்க்க ஒத்தையா நின்னு எவ்வளவு போராடிருக்காங்கறது எங்களுக்குத் தான் தெரியும். இன்னிக்கு தன் நிலையில அவங்க இல்லை. கடைசி காலத்திலயாவது நான் அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைய ஒழுங்கா செய்யணும்னு நினைக்கிறேன். உன்கிட்ட ரோசனை கேக்குறதுக்காக நான் சொல்லலை. நான் அவங்களை இங்க கூட்டிட்டு வரப்போறேன். நம்மளொட வச்சிக்கப்போறேன். இவ்வளவு தான் என்னால சொல்லமுடியும்

வச்சிட்டா. கொண்டு வந்து வச்சிட்டா. சோறு வேணா போடலாம். பீ மூத்தரம் அள்ளுறது யாரு? அப்பவே எனன வாட்டி வதைக்கும். இப்ப வேணும்னே நடு ஹால்ல பேஞ்சு வுடும். நான் வௌக்கமாறும் கையுமா ஆயா வேலை பார்க்கணுமா? அதுக்குத்தான் என் ஆயி அப்பன் என்ன பெத்துப் போட்டாங்களா?

சுமதியின் சப்தம் ஜாஸ்தியாகிக் கொண்டிருந்தது. அவள் ஒரு ஜிங்கு சிக்கா. கல்யாணம் பண்ணி பத்து வருஷம். ஒரு பெண். ஒரு ஆண். சந்தோஷமான வாழ்க்கை தான் தொடங்கியது.

ஒண்ணும் தெரியாத வீட்டிலிருந்து நேரடியாக வந்தாள். அம்மா தான் சமையல் கற்றுக் கொடுத்தாள். நிர்வாகம் கற்றுக் கொடுத்தாள். தன் தொடர்புகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். சந்தோஷமாக இருந்தபோதே ஒரு நாள்

அடுப்புல பால் வெச்சிட்டு பக்கத்தில தான் நின்னுட்டுருந்தேன். பீரொ கதவு தொறந்திருந்துச்சேன்னு போய் சாத்திட்டு வரதுக்குள்ள பாலு பொங்கி ஸடவ் மேல ஊத்திருச்சி. இதுக்குப்போயி மாமி மூஞ்சக்காட்டுது. எப்படி வளத்துருக்கா பாருன்னு என் அம்மாவை வையுது

அழுதாள்.

அம்மா மத்த மாமியார் மாதிரி எல்லாம் இல்லை. இளகிய மனசு. நல்ல மருமகள் வேண்டும் என்று வெறிபிடித்து அலைந்து – நெய் விளக்கு ஏத்தி – இப்படித்தான் சுமதியும் அண்ணியும் கிடைத்தார்கள். சின்ன மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் போகப் போக சரியாகும்..

ச்சீ லுசு. சின்னப்பிள்ளையா நீ. போனாப்போவுது விடு. நீ அழக்கூடாதுகாதல் செய்தேன் நீ அழுதினா என்னால தாங்க முடியாது செல்லம்

தப்பாக போவது தெரியாமல் தப்பாக போயிற்று. படுத்திருந்த சுமதி உட்கார்ந்தாள். எழுந்தாள். நடந்தாள். ஓடினாள்.

மெல்ல மெல்ல என்னிடமிருந்து என்னை உருவினாள். அவள் என்ன சொன்னாலும் என்னை கேட்க வைத்தாள்.

இப்படியே ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து பயந்து வாழ்ந்திட்டிருந்தா நான் சீக்கிரமே செத்துருவேன். என்னால இப்படி பயந்து வாழமுடியாதுங்க. என்ன அம்மாவீட்ல விட்ருங்க. எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க

இன்னொரு நாள் அதிகம் அழுதாள்.

மனசு கேட்காமல் அம்மாவிடம் –

ஏம்மா அவளுக்குத தான் ஒண்ணும் தெரியாதுல்ல. நீ ஏன் அவளையே கரிச்சுக் கொட்டறே. சின்னப் பொண்ணுதானே. அவளை அவ போக்குக்கு விடு

அம்மா கிச்சனில் அழுதாள். குலுங்கி குலுங்கி அழுதாள்.

பேசியது உறுத்த கிச்சனுக்கு போனவன் ஸ்தம்பித்தேன்.

மாமா இறந்தபோது அழுதவள்!!! அதற்குப் பிறகு அப்படி பார்த்தது இல்லை.

என்னைக் கொண்டு இது தான் முதன் முதலில்.

முடிவுக்கு வந்திருந்தாள்.

தம்பி. நீ வீட்ல இருந்துக்கப்பா. நான் இருந்தா ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லவேன் வம்பா போவும் நான் கிராமத்துக்கே போயிடறேன் மிச்ச உள்ள காலத்தையும் கோயில் குளம்னு ஓட்டிடுறேன். அனுஷா வாழ்க்கைகாகத தான் பார்க்குறேன். அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சின்னா என் கடமையெல்லாம் தீர்ந்திடும்

இல்லம்மா.. மன்னிச்சிரும்மா. தப்பா பேசிட்டேன். மன்னிச்சிரும்மா..

நான் தாழ்ந்த்தை அம்மா ரசிக்கவில்லை.  நீண்ட வற்புறுத்தலுக்குப்பின் சமாதானமானாள்.

சரி சரி உட்டுடு. இனிமே நான் வாய மூடிக்கிறனே. வாய் திறந்தா தான் பிரச்னை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்துக்கறேன்

அம்மாவிடம் நான் தாழ்ந்ததை சுமதி ரசிக்கவில்லை.

இப்படி அம்மாக் கோண்டா இருந்தா – கட்டின பொண்டாட்டி என்ன தான் பண்ணுவாமீண்டும் அழுதாள்ஐயோ என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே நான் என்னல்லாம் கனவு கண்டுக்கிட்டிருந்தேன். என் கற்பனையெல்லாம் தவிடுபொடி ஆயிடுச்சே. இப்படி ஒரு முதுகெலும்பு இல்லாத ஆளுக்கிட்ட மாட்டிட்டனே. கடவுளே!!“

வந்த டென்ஷனுக்கு முகத்தில் அடித்திருப்பேன். கையைத் துக்கியது தப்பாகப் போயிற்று.
அடிங்க. அடிங்க. அடிச்சு கொன்னு போடுங்க. உங்க வீரத்தை எல்லாம் காட்ட பொட்டச்சி நான் தானே கெடச்சேன்

நொந்து போனேன். கல்யாணவலையில் மாட்டிக் கொண்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டேன்.

அம்மா ஒத்துப்போனாள். சுமதி அண்டாவையே கவுத்துவிட்டாலும் ஒண்ணும் நடக்காத மாதிரி ஒத்துப்போனாள்.

சுமதியின் நெருக்கடி தீரவில்லை. அம்மாவைப்பற்றி – தங்கையைப்பற்றி – அண்ணன் குழந்தைகள் பற்றி –

ஒரு நாள் என் முதுகில் படுத்துக்கொண்டு மறுபடியும் காதைக் கடித்தாள்.
சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நாம ரெண்டு பேரும் கொஞ்சநாளைக்கு (?) தனியாப் போய் இருந்து பாப்பம். அவங்களுக்கும் கொஞசம் ஃபரீ கெடக்கும். கிட்ட இருந்தா முட்டப் பகை தான். என்ன சொல்றீங்க

நான் தான் அதிபுத்திசாலி ஆயிற்றே.

யோசிச்சி சொல்றேன்என்றேன்.

பளீஸ்என்று என்னை சலவை செய்தாள்.

மயக்கத்தில் நான் எடுக்கும் முடிவுகள் அவள் பக்கமே இருந்தன.

நான் தனியாகப் போனது பார்த்து அண்ணியும் முயற்சித்தாள். வெற்றிகண்டாள்.

அனுஷாவுக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைத்தான். டெல்லி போஸ்டிங். அனுஷாவும் புறப்பட

அம்மா துண்டிக்கப்பட்டாள்.

துண்டிக்க்ப்பட்ட அம்மா நம்பிக்கையிழந்தாள். புறக்கணிக்கப்பட்டதாக உணர்நதாள்.  

வலி என்பது உடலை உணர்வது. காயத்தை உணர்வது வீக்கத்தை உணர்வது. உடலுக்காக மனம் அழுவது. புறக்கணிப்பு என்பது மன வலி. நாலு பேரு போகும்போது வண்டில எடம் இல்ல. நீ ஏறாதேஎன்பது புறக்கணிப்பு. உள்ளே நுழையும்போது உயிரானவர்கள் பேச்சை நிறுத்துவதும் மாற்றுவதும் புறக்கணிப்பு. முதுகுக்கு பின்னாலான சைகைகளும் புறக்கணிப்பு. மடியில் படுத்து உதட்டை வருடியவள் ஐ ஹேட் யு சொன்னாள் புறக்கணிப்பு. புறக்கணிப்பின் வலி கொடுமையானது.

புறக்கணிக்கப்பட்டவள் தனியாகப் புலம்பினாள். ப்ளட் ப்ரஷரும் சுகரும் தீவிரமானது. சுகரால் பார்வை புரையோடியது. கால்கள் துவண்டன. உறுப்புகள் பழுதுபட்டன. பழுதால் பலம் குறைந்தது. பலம் குறைய சஞ்சலம் மிகுந்தது. சஞ்சலம் புலம்ப வைத்தது. நோய்க் கூடியது.

நான் குற்றவாளியானேன்.

சுமதி ஒரு பிடாரி. அவளை தீர்மானிப்பது கடினம். கைமீறிப் போய்விட்டாள்.

அண்ணாவை அணுகினேன்.

நீ ஒரு வேலை செய். நெல்லிக்குப்பம் போ. ஜெயம்மா சும்மா தான் இருக்கு நம்ம அம்மா மேல அதுக்கு அம்புட்டு உசுரு. கூட்டிட்டு வந்திரு. நல்லா பாத்துக்கும். மாசா மாசம் ஆயிரம் ஐந்நுறு கொடுத்திடலாம். நான் கொஞ்சம் நீ கொஞசம் சேத்து கொடுத்திடலாம் என்ன சொல்றே

அவன் எனக்கு யோசனை சொன்னான்.

அண்ணே பணம் முக்கியம் இல்லண்ணே.. அது இப்ப அன்புக்காக ஏங்குது.  ஒரு ஆளாவாது கைக்கெட்டுற துரத்தில இருந்தா அதுல கிடக்கிற நம்பிக்கையே வேற. வெட்கத்தை விட்டு சொல்றேன். என் நிலைமை ரொம்ப மோசம். சுமதி பழையபடி இல்லண்ணே

சரி தான் பாலா.  நான் இருக்கிற இந்த குருவிக்கூட்டுல அம்மாவும் வந்திச்சின்னா எங்க போடறது!! அட ஹால்ல ஒரு கட்டில போட்டு சீக்காளிய போட்டா நல்லாவா இருக்கும்! என்ன பாக்க அண்ணிய பாக்க வரவங்கள்ளாம் முகம் சுளிக்க மாட்டாங்களா? அம்மா வாய் சும்மா இருக்குமா? வரவங்க போறவங்க கிட்ட ஒண்ணுகிடக்க ஒண்ணும் பேசும். இதுலாம் நடக்கிற காரியம் இல்லை. நீ ஜெயம்மாவ கூட்டிட்டு வா. வேணும்னா மொத்த பணத்தையும் நானே கொடுத்திடறேன். ஆஸ்பத்திரி செலவு மருந்து மாத்திரை செலவு மட்டும் நீ பாத்துக்க சொல்றது சரிதானே

வேறு வழியின்றி இன்னொரு தங்கை சுசிலாவைக் கேட்டேன்.

அண்ணா நீ தெரிஞ்சு தான் பேசறியா. கைக்குழந்தைய வச்சிக்கிட்டு ஒத்தையா நின்னுட்டுருக்கேன். உதவி ஒத்தாசைக்கு யாரும் இல்லை பத்தாத்துக்கு சிசேரியன் வேற. முதுகுல ஊசி போட்டு முதுகு வலி வேற.  வெயிட் எதுவும் தூக்கக் கூடாது. அம்மாவை துக்கி பாதரும் விட்டு குளிக்கவச்சி சாப்பாடு குடுத்து மருந்து கொடுத்து எப்படின்னா முடியும். அதுவும் அவருக்கு பிரைவசி போயிடும். ரொம்ப தர்மசங்கடப்படுவார். நீயாவது என்ன புரிஞ்சிக்கண்ணா

ஒரு தாயால் பத்து பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள முடியும். பத்து பிள்ளைகளால் ஒரு தாயைப் பார்த்துக் கொள்ள முடியாது – எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.

தாயின் கதகதப்பு தேவைப்பட்ட நாட்கள்.  பசித்த போது பால் கொடுத்த சேவை.. கண்டகண்ட இடத்தில் கழிந்தபோது முகம் சுளிக்காத சேவை.. இனி தேவையில்லை. எனக்கு நடக்கத் தெரியும். எனக்குப் பேசத்தெரியும்.. எனக்கு ஓடத் தெரியும். எனக்கு பணம் பண்ணத்தெரியும்.. உனக்கு என்னத தெரியும்?

குற்ற உணர்ச்சி வாட்டி வதைத்தது.

சுமதியிடம் போராடிப் பெறலாம். என்னமோ செய்து தொலைங்க என்பாள். அம்மாவைக் கூட்டி வரலாம். அதோடு முடியாது என் கடமை.

இனி அம்மா குழந்தை. தவழும் குழந்தை. ஒழுங்காகப் பேசத் தெரியாத குழந்தை. தன்னையே கவனித்துக் கொள்ளத் தெரியாத குழந்தை.

என் தாய் எனக்கு மட்டுமே!. எனக்கு மட்டுமே சதை ஆடும். சுமதிக்கு ஆட வேண்டிய அவசியம் இல்லை. சுமதிக்கு வரும் இந்தப் பொறுப்பை அவள் விரும்பவேயில்லை. விரும்பாத பொறுப்பை ஏற்பது ஒப்புக்கு சப்பாணி தான்.

என் வீட்டில்சுதந்திரமாக இருமக் கூட முடியாது. சுமதியின் முகக்கொட்டுரத்தை தாங்காமல் மூத்திரத்தைக் கூட அடக்கி வைப்பாள்.  பசிக்கு கேட்கத் தெரியாது. வலிக்கு முனக முடியாது. சித்திரவதை. மேலும் மேலும் சித்திரவதை.

நோக்கியாவை சொடுக்கினேன்.

தமிழரஸ். எனக்கு ஒரு வீடு வேணும்.  சின்னதா இருந்தாலும் பரவால்லை. க்ரவுண்ட் ஃப்ளோரா இருக்கணும். பாத்ரும் அட்டாச்டு ரும் வெஸ்டர்ன் டாய்லட் .பெசிலிட்டி மஸ்ட். ஏதாவது ஹாஸ்பிடல் பக்கத்துல இருந்தா இன்னும் பெட்டர்

யாருக்கு பாலாஜி?

எனக்கும் அம்மாவுக்கும்
Don't miss even a single word... Every second is worth reading this mail... Too good. An atheist professor of philosophy speaks, to his class on the problem science has with God, The Almighty.
He asks one of his new students to stand and..... 

Prof: So you believe in God? 
Student: Absolutely, sir. 
Prof : Is God good? 
Student: Sure. 
Prof: Is God all-powerful? 
Student : Yes. 
Prof: My brother died of cancer even though he prayed to God to heal him. Most of us would attempt to help others who are ill. But God didn't. How is this God good then? Hmm?
(Student is silent.) 


 
Prof: You can't answer, can you? Let's start again, young fella. Is God good? 
Student: Yes. 
Prof: Is Satan good? 
Student : No. 
Prof: Where does Satan come from? 
Student: From...God... 
Prof: That's right. Tell me son, is there evil in this world? 
Student: Yes. 
Prof: Evil is everywhere, isn't it? And God did make everything. Correct? 
Student: Yes. 
Prof: So who created evil? 
(Student does not answer.) 
Prof: Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don't they? 
Student: Yes, sir. 
Prof: So, who created them? 
(Student has no answer.) 
Prof: Science says you have 5 senses you use to identify and observe the world around you. Tell me, son...Have you ever seen God?
Student: No, sir. 
Prof: Tell us if you have ever heard your God? 
Student: No, sir. 
Prof: Have you ever felt your God, tasted your God, smelt your God? Have you ever had any sensory perception of God for that matter? 
Student: No, sir. I'm afraid I haven't. 
Prof: Yet you still believe in Him? 
Student: Yes. 
Prof: According to empirical, testable, demonstrable protocol,
science says your GOD doesn't exist.
What do you say to that, son? 
Student: Nothing. I only have my faith. 
Prof: Yes. Faith. And that is the problem science has. 
Student: Professor, is there such a thing as heat? 
Prof: Yes. 
Student: And is there such a thing as cold? 
Prof: Yes. 
Student: No sir. There isn't. 
(The lecture theatre becomes very quiet with this turn of events.) 
Student : Sir, you can have lots of heat, even more heat, super heat, mega heat, white heat, a little heat or no heat. But we don't have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat, but we can't go any further after that. There is no such thing as cold . Cold is only a word we use to describe the absence of heat. We cannot measure cold. Heat is energy . Cold is not the opposite of heat, sir, just the absence of it .
(There is pin-drop silence in the lecture theatre.) 
Student: What about darkness, Professor? Is there such a thing as darkness? 
Prof: Yes. What is night if there isn't darkness? 
Student : You're wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright light, flashing light.....But if you have no light constantly, you have nothing and it's called darkness, isn't it? In reality, darkness isn't. If it were you would be able to make darkness darker, wouldn't you? 
Prof: So what is the point you are making, young man? 
Student: Sir, my point is your philosophical premise is flawed. 
Prof: Flawed? Can you explain how? 
Student: Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good God and a bad God. You are viewing the concept of God as something finite, something we can measure. Sir, science can't even explain a thought. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one.To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing. Death is not the opposite of life: just the absence of it. Now tell me, Professor.Do you teach your students that they evolved from a monkey? 
Prof: If you are referring to the natural evolutionary process, yes, of course, I do. 
Student: Have you ever observed evolution with your own eyes, sir? 
(The Professor shakes his head with a smile, beginning to realize where the argument is going.)
Student: Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavor, are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher?
(The class is in uproar.) 
Student: Is there anyone in the class who has ever seen the Professor's brain? 
(The class breaks out into laughter.) 
Student : Is there anyone here who has ever heard the Professor's brain, felt it, touched or smelt it? No one appears to have done so. So, according to the established rules of empirical, stable, demonstrable protocol, science says that you have no brain,sir. With all due respect, sir, how do we then trust your lectures, sir? 
(The room is silent. The professor stares at the student, his face unfathomable. ) 
Prof: I guess you'll have to take them on faith, son. 
Student: That is it sir... The link between man & god is FAITH . That is all that keeps things moving & alive.
NB: I believe you have enjoyed the conversation. ..and if so...you'll probably 
want your friends/colleagues to enjoy the same...won't you?.... this is a true story, and the student was none other than...
APJ Abdul Kalam , the former president of India...

அழுக்கு வேட்டியும், அப்பாவும்……நல்ல கதை
 
அப்பா நன்றாகக் குடித்திருந்தார், வரும்போதே குடித்து விட்டு வரும் அப்பாவை என்ன சொல்லித் திட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை, அப்பா குடிப்பது வழக்கமான ஒன்றுதான், அவர் எவ்வளவு குடித்தாலும் தன்னிலை மறந்து கீழே விழுந்து கிடந்ததாகவோ, யாரையும் தகாத சொற்களால் திட்டியதாகவோ எனக்கு நினைவில் இல்லை, ஆனாலும் குடித்து விட்டு வீட்டுக்குள் வருபவர்களை எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை, அது அப்பாவாக இருந்தாலும் சரி, "காலைலேயே தண்ணி அடிக்கணுமா?, தண்ணி அடிக்கிறதா இருந்தா வீட்டுப் பக்கம் வராதீங்க" என்று சொல்ல நினைத்தேன், பிறகு அந்தச் சொற்கள் அவரது மனதை அதிகம் பாதிக்கலாம் என்று யோசித்து விட்டு அப்படியே விட்டு விட்டேன்.எனது மகன் முருகனும், மகள் குழலியும் தாத்தா வாங்கி வந்திருந்த அச்சு முறுக்கையும், பனங்கிழங்கையும் வாங்கிக் கொண்டு பதிலுக்குச் சில முத்தங்களை அவருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள், 

அம்மாவோடு எத்தனை சண்டை போட்டாலும் அப்பாவை மரியாதைக் குறைவாகவோ, கடுமையாகவோ என் மனைவி ஒருபோதும் பேசி இருக்கவில்லை, அது எனக்கு எப்போதும் ஒரு வியப்பான ரகசியமாகவே இருந்தது, நான் அவரை ஏதேனும் கடும் சொற்களால் பேசினால் கூட உடனடியாக ஒரு கோப்பைத் தேநீரை அவருக்குக் கொடுத்து நான் இருக்கிறேன் என்று என் அப்பாவுக்கு  ஆதரவுக் கொடி பிடிப்பாள். "எப்டி இருக்கீங்க, அதிகமா குடிக்காதீங்க மாமா, இன்னும் ரொம்ப நாள் பேரப் புள்ளங்களோட நீங்க நல்லா இருக்கணும்னு தான் நெனைக்கிறோம்" என்றபடி அப்பாவோடு தனது உரையாடலைத் துவங்கி விட்டிருந்தாள் தாமரை. இனி அவர்களின் உரையாடல் மாலை வரை நீடிக்கும்.

சின்ன வயதில் இருந்தே அப்பாவைக் கண்டால் எனக்குப் பிடிப்பதில்லை, அதற்கு நிறையக் காரணங்கள் என்னிடத்தில் இருந்தன, ஒன்று அவர் ஒரு ஏழையாய் இருந்தது, இன்னொன்று அவர் காய்கறிக் கடை வைத்திருந்தது, ஒரு காய்கறிக் கடைக்காரரின் மகன் என்று பள்ளியில் சொல்லிக் கொள்வதற்கும், கல்லூரியில் நண்பர்களிடத்தில் சொல்லிக் கொள்வதற்கும் எனக்கு இருந்த வெட்கமும், தாழ்வுணர்வுமே அவரை எனக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்று நினைக்கிறேன், அவர் பெரும்பாலும் கடையிலேயே காலம் கழித்தார்,  நான் சிறுவனாக இருந்தபோது விடுமுறை நாட்களில் வலுக்கட்டாயமாக என்னை அவர் கடைக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுவார், கடினமான வேலைகள் எதையும் எனக்குச் வழங்குவதில்லை என்றால் கூடக் கல்லாவில் உட்கார வைத்து விடுவார், வருகிற பணத்தை எண்ணி வாங்குவது மீதிச் சில்லறை கொடுப்பது என்று என்னுடைய பல விளையாட்டு நாட்களை நான் இழந்து போனதற்கு அப்பா தான் காரணம் என்று நான் உறுதியாக நம்பினேன், பலமுறை கிரிக்கெட் பந்தயங்கள் நடக்கும் போது நான் கடையில் அமர்ந்திருப்பது சிறையில் அடைக்கப்பட்ட மனநிலையைத் தந்திருக்கிறது. ஆகவே நான் அவரைக் கடுமையாக வெறுக்கத் துவங்கி இருந்தேன், அவருடைய முகத்தையும், அவருடைய நடவடிக்கைகளையும் என்னையும் அறியாமல் நான் வெறுப்பது எங்கிருந்து தொடங்கியது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கடையில் வேலை செய்வதற்கு இரண்டு பேர் இருந்தாலும் கூட அவரே பல நேரங்களில் மூட்டைகளை லாரியில் இருந்து இறக்குவார், அந்தக் காட்சியைக் காண்பதற்கு எனக்கு மிகவும் எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கும். அப்பாவின் மீது நான் வெறுப்புக் கொள்வதற்கு இன்னொரு மிக முக்கியமான காரணமும் இருந்தது, அது அவருடைய உடைகள் பற்றியது.

அப்பா எப்போதும் அழுக்கான முரட்டுத் துணிகளையே ஆடையாக அணிந்திருப்பார், பள்ளியில் பணம் கட்டுவதற்கும், கல்லூரியில் கையெழுத்துப் போடுவதற்கும் கூட அவர் அதே அழுக்கு உடைகளோடு தான் வருவார், சில நேரங்களில் அரக்கு நிறத்தில் மாறிப் போயிருக்கும் வெள்ளை வேட்டியில் அவர் என் கூட வருவது வெட்கமானதாகவும், சினம் வரவழைப்பதாகவும் இருந்திருக்கிறது. கல்லூரி காலத்தில் ஒருமுறை அவரோடு அப்படி நடந்து சென்று கொண்டிருந்தபோது கூடப் படிக்கும் பெண் தோழிகள் சிலர் கூட்டமாக எதிர்ப்பட்டார்கள், அவர்களின் கண்களில் படாமல் ஒளிந்து நடந்து செல்ல வேண்டியிருந்தது, இருப்பினும் அவர்களில் ஒருத்தி என்னைக் கவனித்து விட்டு "என்ன கதிரவா? அப்பாவோட வாக்கிங்கா?" என்று நக்கலடித்தாள், அவமானமாக இருந்தது. அம்மாவிடம் வந்து "ஏம்மா, அப்பா யாரையும் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறாறு?" "ஏண்டா இப்படி ஒரு ஆளுக்கு மகனாப் பொறந்தோம்னு இருக்கும்மான்னு" என்றதும், அம்மா, ஒன்றும் சொல்லவில்லை, அப்பாவை யாரும் குறை சொல்வது அம்மாவுக்குப் பிடிக்காது, அது மகனாக இருந்தாலும் என்பதை அம்மாவின் பார்வையில் உணர்ந்தவனாக நகர்ந்தேன். அம்மா, அப்பாவைப் பற்றி எந்தக் குறையும் எப்போதும் சொன்னதில்லை, அவர் குடிப்பதைப் பற்றி மட்டும் அவர் வருத்தப்படுவாரே தவிர, அவரைப் பற்றிய எந்த ஒரு வெறுப்பான மனநிலையையும் வெளிப்படுத்தியதாக எனக்கு நினைவில்லை.

மாலையில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது அப்பா அறைக்குள் படுத்திருந்தார், குழலி அப்பாவுக்கு அருகில் அமர்ந்து ஏதோ கதை கேட்டுக் கொண்டிருந்தாள், பொதுவாக காலையில் வந்தால் மாலையில் கிளம்பி விடுவது தான் அப்பாவின் வழக்கம், நாங்கள் இருக்கும் நகரத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் தான் ஊர், நினைத்தால் வந்து விடுவது அப்பா, அம்மாவுக்கும், எங்களுக்கும் பழக்கமான ஒன்றுதான். இன்று வழக்கத்துக்கு மாறாக அவர் இங்கேயே இருந்தது ஒரு பக்கம் எரிச்சலாக இருந்தது, "இந்த மனுஷன் என்ன இன்னும் கெளம்பாம இருக்காரு" என்று பல்லைக் கடித்தவாறே முருகனைத் தேட ஆரம்பித்தேன். "தாமர, அவன எங்கே காணம்? சாய்ங்கால நேரத்துல அவன வெளில விடாதன்னு சொல்லி இருக்கேன்ல" என்று அப்பாவின் மீதுள்ள எரிச்சலை மனைவியிடம் காட்டினேன். "அவன் மெடிக்கல் ஷாப்புக்கு  போயிருக்காங்க, மாமாவுக்கு வயித்து வலின்னு நான்தான் மாத்திரை வாங்க அனுப்பி இருக்கேன்" என்றாள் தாமரை. "ஆமா, காலைலே குடிக்கச் சொல்லு வயித்த வலி வராது, நம்மள வேற எதுக்கு தொந்தரவு பண்றாருன்னு தெரியல" என்று நான் முனகியது அனேகமாக தாமரையில் காதில் விழுந்திருக்கும் என்பது அவள் கையில் இருந்த பாத்திரத்தை அழுத்தமாகக் கீழே விட்டதில்  இருந்து தெரிந்தது.

தொலைக்காட்சியில் கழிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நான் அப்பாவை மறந்திருந்தேன், திரும்பி அறைக்குள் பார்த்தபோது அப்பா, வலியால் அவதிப்படுவது மாதிரித் தெரிந்தது எனக்கு, அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளவில்லைஎன்றால் கூட அவர் மெல்ல முனகுவது மாதிரித் தெரியவும், உள்ளே சென்று "ரொம்ப வலியா இருந்தா ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டு வரலாம் வாங்கப்பா" என்றேன். அவரும் எழுந்து சட்டையை மாட்டிக் கொள்ளத் துவங்கினார், வேறெதுவும் சொல்லாமல் அவர் அப்படிக் கிளம்பியது அவருக்கு வலி மிகுதியாக இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது. வண்டியைக் கிளப்பினேன், அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று காத்திருந்து மருத்துவரைச் சந்தித்தபோது இரவு ஒன்பதுக்கும் மேலாகி விட்டிருந்தது. சில சோதனைகளைச் செய்து விட்டு என்னை மீண்டும் உள்ளே அழைத்தார் மருத்துவர், மிக இளவயது மருத்துவராக இருந்ததால் நெருக்கமாகப் பேசினார், "ஏதோ யூரினல் அலர்ஜி மாதிரித் தான் சார் தெரியுது, ஒரு கிட்னிதானே, இதுமாதிரிப் பிரச்சனைகள் அடிக்கடி வரும், எதுக்கும் இன்னைக்கு இரவு இங்கேயே இருந்து பார்த்துக் கொண்டால் நல்லது" என்றார் மருத்துவர். "சரி சார், அப்படியே செய்யலாம்" என்று சொல்லி விட்டு அப்பாவை செவிலிப் பெண் காட்டிய படுக்கை அறைக்குள் படுக்க வைத்து விட்டு தாமரைக்கு அழைத்தேன். மருத்துவர் ஒரு கிட்னி என்று சொன்னது கொஞ்சம் குழப்பமாக இருந்தது எனக்கு. அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனை வாசலில் தாமரை நின்று கொண்டிருந்தாள். பொதுவாகவே மருத்துவமனை செல்வது தாமரைக்குப் பிடிக்காது, அதிலும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மருத்துவமனையில் இருந்தால் அவள் வருவதே இல்லை, மருத்துவமனைகளில் நிலவும் ஒருவிதமான கலவையான மருந்துகளின் மணம் தனக்கு வயிற்றுக் குமட்டலைத் தரும் என்றும், அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு உணவு சாப்பிட முடியாது என்றும் அடிக்கடி அவள் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பாள், ஆனால் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்றவுடன் அவள் ஓடி வந்தது போலிருந்தது எனக்கு. இந்த குடிகார மனுஷன் மேலே மட்டும் அப்படி என்ன கரிசனையோ என்று மனதுக்குள் திட்டியபடி நான் அவளை உள்ளே அழைத்துச் செல்ல அப்பா இப்போது படுக்கையில் அமர்ந்திருந்தார். "மாமா, டாக்டர் என்ன சொன்னாரு?" என்று அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அனேகமாக வீட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த உரையாடலை இருவரும் துவக்கியது போலிருந்தது எனக்கு.

பத்து மணிக்குத் தம்பி அம்மாவைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து விட்டான், அநேகமாகத் தாமரை தான் அம்மாவுக்குச் சொல்லி இருப்பாள், அம்மா நேராக அப்பாவிடம் சென்று அவரது படுக்கையில் அமர்ந்து கொண்டாள், ஏங்க, காலைல ரொம்பக் குடிச்சீங்களா? ஏன் வயித்த வலிக்குது? மத்தியானம் என்னம்மா சாப்டாரு? ஏண்டா டாக்டர் என்ன சொன்னார்? ஊசி போட்டாங்களா? மாத்திரை எழுதிக் கொடுத்தாங்களா? என்று ஒரு சி.பி.ஐ அதிகாரி அளவுக்குக் கேள்வி கேட்ட அம்மாவை முறைத்தேன் நான். "போடா, தாமரையையும் கூட்டிட்டுப் போய் படுங்க, காலைல வரலாம்" என்று அம்மா சொல்லத் துவங்கியதும் அதற்காகவே காத்திருந்தவன் போல தாமரையைப் பார்த்தேன், அவளும் கிளம்புவதற்குத் தயாரானாள், முருகன் மருத்துவமனையில் வைத்திருந்த மீன் தொட்டியின் அருகே நின்று கொண்டு மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான், வாடா கிளம்பலாம் என்று நான் அவனை வீட்டுக்குக் கூப்பிடவும் "அப்பா, இதுல இருக்குற Black Tiger" தாம்பா நான் கேட்டுக் கிட்டே இருக்கேன். எப்பப்பா வாங்கித் தருவீங்க", தாத்தா கூட்டிட்டுப் போய் வங்கித் தாரேன்னு சொன்னாருப்பா, அவரு எப்போ வீட்டுக்கு வருவாரு" என்றான். நள்ளிரவில் ஒருமுறை அலைபேசியில் அம்மாவோடு உரையாடிக் கொண்டிருந்தாள் தாமரை. பேசி முடித்ததும் "என்ன எப்படி இருக்காராம்" என்றேன் நான். இப்போ வலி எதுவும் இல்லையாம், மாமா நல்லாத் தூங்கிக்கிட்டு இருக்காராம்" என்று சொல்லி விட்டு ஒரு பெருமூச்சு விட்டுப் படுத்துக் கொண்டாள் தாமரை.

காலையில் கொஞ்சம் விரைவாகவே எழுந்து மருத்துவமனைக்குச் சென்றேன் நான், அதிக நடமாட்டம் இல்லாத அதிகாலைத் தெருவுக்குள் சூரியக் கதிர்கள் மட்டும் சுதந்திரமாய் படிந்திருந்தன. மருத்துவமனைக்குள் நுழைந்து அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு முன்னாள் சென்ற போது அப்பாவின் குரல் காதில் விழுந்தது, "இல்ல, மாரி, அவன் கிட்ட கடைசி வரைக்கும் அதச் சொல்லவே கூடாது, ஏன்னா, அது ஒரு பெரிய கொறையாவே போயிரும், தேவை இல்லாம அவனுக்குப் பயம் வரும், இதுவரைக்கும் அவனுக்கு கிட்னி பிரச்சனை எதுவும் வரவே இல்லை, ஒருவேளை அவனுக்கு இந்த ஆபரேஷன் பண்ணின விஷயம் இப்போத் தெரிஞ்சாக் கூட மனசளவுல எம்புள்ள உடைஞ்சு போயிருவான். நமக்கு ஏதோ கொறை இருக்குன்னு அவனுக்குத் மனசுல படக் கூடாதுன்னு தானே இந்த விஷயத்த நாம இவ்வளவு காலமா மறச்சோம், இப்போ திடுதிப்புன்னு அவன்கிட்டச் சொல்லப் போறேன்னு சொல்றியே".

"இல்லங்க, உங்க மேலே அவனுக்கு வரவரப் பாசமே இல்லாமப் போகுது, நீங்க அந்தப் பய மேல எம்புட்டுப் பாசம் வச்சிருக்கீங்கன்னு இப்பவாவது அந்தப் பயலுக்குத் தெரியட்டும், ஒத்தக் கிட்னிய அந்தப் பயலுக்குக் குடுத்திட்டு நீங்க பட்ட பாடு எனக்குத் தானங்க தெரியும், அந்த வலி வேதனைலையும், நகண்டு நகண்டு போய் டாக்டர் கிட்ட நின்னு எம்புள்ளைக்கு ஒன்னும் ஆகாதுல்ல சார்னு நீங்க அழுத கண்ணீர் இந்தப் பயலுக்கு என்னங்க தெரியும், இந்தப் பய வளந்து செழிச்சது எல்லாம் நீங்க போட்ட பிச்ச தானங்க, நீங்க சொல்லக் கூடாதுன்னு சொன்ன சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இவ்வளவு காலம் நான் பொறுமையா இருந்தது போதும்" என்று அம்மா விசும்பத் துவங்கி இருந்தாள்.

இந்த உரையாடலின் மையப் புள்ளியை நான் உணர்ந்து கொண்டபோது மருத்துவர் சொன்ன ஒற்றைக் கிட்னி குழப்பம் என்னிடம் இல்லை, எனக்குள் அப்பாவைக் குறித்த இனம் புரியாத உணர்வுகள் சுற்றி அலையத் துவங்கி இருந்தன. எனக்கு பள்ளிக் காலம் வரையில் நடந்த தொடர் சோதனைகளும், மருந்து மாத்திரைகளும் நினைவுக்கு வந்து போயின, என்னைச் சுற்றி அந்த அதிகாலையில் இருள் சூழத் தொடங்கி இருந்தது, எனக்குக் கீழே இருந்த மருத்துவமனைக் கட்டிடம் இன்னும் சிறிது நேரத்தில் இடிந்து விழும் போலிருந்தது. எனக்கு அழ வேண்டும் போலிருந்தது, சத்தம் போட்டு அழுது விடுவேனோ என்று நான் அஞ்சினேன். மெல்ல அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்தேன், விரைவாக வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனபோது தாமரை பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து கொண்டிருந்தாள், தாமரை என் முகத்தைப் பார்த்தாள், என்னங்க மாமா எப்டி இருக்காங்க? டாக்டர் எதுவும் பயப்படுற மாதிரி இல்லைன்னு சொன்னாராம், இன்னைக்கு மத்தியானம் வீட்டுக்குக் கூட்டிப் போகலாம்னு அத்தை சொன்னாங்க" என்றாள். நான் அமைதியாகவே இருந்தேன். பிறகு முருகனைப் பார்த்து "முருகா இன்னைக்கு லீவு போட்ரலாம், தாத்தா கூட ஆஸ்பத்திரில இருந்துட்டு அப்புறமா நீ போய் அவர் கூட Black Tiger வாங்கிட்டு வா" என்றதும் என்னை முருகன் விநோதமாகப் பார்த்தான்.

நாங்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்து அப்பாவிடம் சென்ற போது சுவற்றில் யாரையோ இவர் நல்ல மேய்ப்பன் என்று எழுதிப் போட்டிருந்தார்கள், எனக்கு அவர் கீழே நின்று கொண்டிருந்தது மாதிரித் தெரிந்தது, "குடிக்கிறத விட்டிருங்க பெரியவரே" என்று அந்த இளம் மருத்துவர் அப்பாவுக்கு அறிவுரை சொல்லி விட்டு எங்களைப் பணம் கட்டுவதற்காகக் கீழ்த் தளத்திற்கு போகச் சொன்னார், அப்பா, படுக்கையில் இருந்து எழுந்து நின்றார், கீழே வைக்கப்பட்டிருந்த மருந்துக் குப்பி ஒன்று அவர் காலில் தட்டவும் கொஞ்சம் தடுமாறினார் அப்பா, எனது கைகளால் அப்பாவை அணைத்துப் பிடித்துக் கொண்டேன் நான். "மெதுவாப்பா" என்று சொல்லி விட்டுக் கீழே குனிந்தேன், அப்பா எனது கண்களில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரைப் பார்த்து விட்டார், "ஏண்டா ஐயா, அதான் ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொன்னாரே" என்று சொல்லி விட்டு "இவன் என்ன சின்னப் புள்ள மாதிரி அழுதுகிட்டு…….., சொல்லு மாரி" என்றார்.

எதற்காகவோ அப்பா என்று கத்தினான் முருகன், அந்தச் சொற்கள் உலகில் உச்சரிக்கப்படும் மிக உன்னதமான சொற்களைப் போல என் காதுகளில் ஒலிக்கத் துவங்கியது, அழுக்கு வேட்டியாலும், காய்கறிக் கூடைகளாலும் இத்தனை காலம் மறைக்கப்பட்டிருந்த எனக்கே எனக்கான அப்பாவை நான் கண்டு பிடித்துக் கொண்டேன், அவரது காய்த்துப் போயிருந்த கைகளை நான் கொஞ்சம் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தேன். அப்பாவின் உடலில் மிக இன்றியமையாத பணியாற்றும் ஒரு பகுதி எனக்குள் பொருத்தப்பட்டிருப்பதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய வரமாக அந்தக் கணங்களில் நான் நம்பத் துவங்கினேன். தெரிந்து கொள்ள முடியாத பல தியாக வரலாறுகளைச் சுமந்து கொண்டு நம் கண் முன்னே நடமாடித் திரியும் நல்ல மேய்ப்பர்களை விடுத்து நாம் தான் பல நேரங்களில் கோவில்களுக்குள்ளே போய்க் கடவுளரைத் தேடித் திரிகிறோமோ என்று தோன்றியது. எனக்கான உலகம் அப்பாவினால் எனக்கு வழங்கப்பட்ட ஒற்றைக் சிறுநீரகத்தின் அச்சில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவதற்குள் வீடு வந்து விட்டிருந்தது.
இயற்கை வைத்திய அகராதி

இயற்கை அல்லது கை வைத்தியம் என்பது மிக எளிதானது, மற்றும் தொன்று தொட்டு பின்பற்ற பட்டு வருவதாகும். பெரியவர்கள் சாப்பாட்டு வகையில் கையாண்ட  முறைகளே ஒரு வகை மருந்தாகும். தற்போது  எல்லாம் துரித உணவு முறைகள்.

இந்த அகராதி எல்லோருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இப்பொழுது. எனெனில், எளிதாக போக வேண்டியதற்கு, நீண்ட வழியில் கொண்டு செல்கின்றனர் வைத்தியர்கள்.

இதை படித்து எளிய முறையில், நம் உணவு முறையில் சிறிய  உடல் உபாதைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.   

 
அசீரணம்

கறிவேப்பிலையுடன் சுட்டு புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வாந்தி, ஜீரணக் கோளாறுக்ள போன்றவை சரியாகும்.

ஆண்மை

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்னை சரியாகும்.

கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கானாம்வாழைக் கீரை (உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.

துத்திக்கீரையுடன், கற்கண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு கசாகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.

பாலக் கீரையுடன் முளை கட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

முள்ளிக் கீரை சாறில் கொள்ளை கொண்டைக் கடலையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், ஆண்மை பெருகும். நரம்புகள் இறுகும்.

பாற்சொரிக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சுக்குக் கீரைச் சாறில் முந்திரிப்பருப்பை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

சுக்குக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து விரைந்து வெளியேறுதல் பிரச்னை சரியாகும்.

ஆஸ்துமா

தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரை சாறு எடுத்து அதில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியை ஒரு வெற்றிலையில் வைத்து, தேனில் குழைத்து, வெற்றிலையோடு சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரை சாறில் சிறிது கோரோசனை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.

துயிலிக் கீரை சாறில் சித்தரத்தையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்.

இடுப்பு வலி

நச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.

இதய நோய்கள் குணமாக

மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்களும், இரத்த அழுத்தமும் குணமாகும்.

இரத்த அழுத்தம்

முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம், இதய நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றில் 5 கிராம் சீரகத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

முசுமுசுக்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

ஆரைக்கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால், இரத்த அழுத்த நோய் குணமாகும்.

மணலிக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.

சுக்குக்கீரையுடன் ஒரு கைப்பிடி அளவு துளசியைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குணமாகும்.

இரத்த ஓட்டம்

தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்.

இரத்தக் குறைவு

இரத்தக் குறைவால் சிலருக்கு மயக்கம் வருவதுண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து காய வைத்து இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.

இரத்தம் சுத்தம்

இரத்தம் சுத்தமில்லாவிட்டால் சில கோளாறுகள் உடம்மில் ஏற்படுகின்றன. இரத்தத்தைச் சுத்தப்படுத்த, பூசணிக்காயை இடித்துச் சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சுத்தமான தேனைக் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வரவும். இரத்தம் சுத்தமாகும். பூசணிக்காய் ஒத்துக்கொள்ளாதவர்கள் இதனைச் செய்ய வேண்டாம்.

அரை கீரைச் சாறில் ஒரு கிராம் ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் தூய்மையாகும்.

வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும் குணமாகும்.

தூதுவளைக் கீரையுடன் சம அளவு வேப்பந்துளிர் சேர்த்து கஷாயமாக்கி, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், இரத்தம் தூய்மையாகும். கிருமிக் கோளாறுகள் நீங்கும்.

பொடுதலைக் கீரையுடன் கடுக்காய் (1), நெல்லிக்கனி (1), தான்றிக்காய் (1) மூன்றையும் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால், இரத்தம் சுத்தமாகும். உடல் வலிமை உண்டாகும்.

அம்மான் பச்சரிசி கீரையுடன் மிளகு (3), வேப்பிலை (3) இரண்டையும் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் ( 2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

சுக்காங் கீரையுடன் வேப்பிலை (இரண்டு), சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்களும் குணமாகும்.

பாற்சொரிக் கீரையுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

இரத்த சோகை

ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.

கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

இரத்த விருத்தி

பாற்சொரிக் கீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் இரத்த விருத்தி உண்டாக்கும்.

இருமல்

முளைக்கீரை, அதிமதுரம் (ஒரு துண்டு) மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

வெந்தயக் கீரையுடன், உலர்ந்த திராட்சை (10), சீரகம் அரை ஸ்பூன் இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.

தூதுவளைக் கீரையுடன் அதிமதுரம், தனியா, உலர்ந்த திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், இருமல், விடாத தும்மல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 கிராம் அளவுப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல், புகைச்சல் போன்றவை குணமாகும்.

பண்ணைக் கீரைச் சாறில் அதிமதுரத் தூளை கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

வங்கார வள்ளைக் கீரை, கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல், சளி, ஆஸ்துமா குணமாகும்.

மணலிக் கீரைச் சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூடு

அகத்திக்கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

கொத்தமல்லியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று தின்றால் உடல் சூடு குறையும். நன்கு பசி எடுக்கும்.

வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

கல்யாண முருங்கை இலையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.

கொடிப்பசலைக் கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், உடல் சூடு, வெட்டைச் சூடு வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

கொடிப்பசலைக் கீரைக் கீரையை அரைத்து தலையில் கட்டிக்கொண்டால், வெட்டைச்சூடு, கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் தீரும்.

குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும்.

பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு, குடல் புண் ஆகியவை தீரும்.

புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.

பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, பிறகு கால வைத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

முக்குளிக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

முருங்கைக்கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும். பொடுகுப் பிரச்னையும் இருக்காது.

பாற்சொரிக்கீரை, முளைக்கீரை இரண்டையும் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

உடல் மினுமினுக்க

அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய வைக்கவும். பிறகு அதை நெல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.

உடல் வனப்பு

சிறுகீரையை குடை மிளகாய், சிறு பருப்பு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்துச் சமைத்து, தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வதக்கி, அத்துடன் சிறிது மிளகு, உப்பு சேர்த்துக் கடைந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால் உடலுக்கு அழகும், பொன்னிறமும் ஒரு சேர உண்டாகும். நீடித்த ஆயுளும், நோயில்லா வாழ்க்கையும் பெறலாம்.

உடல் வலி

துத்திக் கீரையை தண்ணீரில் போட்டு வேக வைத்து பிறகு, தண்ணீரில் போட்டு குளித்தால், உடல் வலிகள் சரியாகும்.

உடல் பருக்க

மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.

உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால், இளைத்த உடல் பெருக்கும்.

பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.

சுக்காங் கீரையைப் பருப்பு போட்டுக் கடைந்து சாப்பிட்டால் இளைத்த உடல் பெருக்கும்.

உடல் வலிமை பெற

பசலைக் கீரைச் சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி கஞ்சி காய்ச்சிக் குடித்தால், உடல் வலிமை பெறும். இளைத்த உடல் பெருக்கும்.

புளிச்சக்கீரை சாறுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.

வெந்தயக் கீரையை அரைத்து, அதில் மாதுளை ஓடு, வில்வ ஓடு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கலந்து காய வைத்துப் பொடியாக்கித் தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் நல்ல உடல் வலிமை உண்டாகும். சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

முடக்கத்தான் கீரைச் சாறில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவு போட்டு ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, 2 ஸ்பூன் அளவு எடுத்து, சின்ன வெங்காயம் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் வலிமை பெறும்.

கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.

அம்மான் பச்சரிசி கீரையுடன் கடுக்காய் பொடி கலந்து சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.

முசுமுசுகைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் பலம் உண்டாகும்.

பாலக்கீரையை அரிந்து, சின்ன வெங்காயம், சீரகம், மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து வதக்கிச் (அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டுக்கோழி முட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்) சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும்.

பிண்ணாக்குக் கீரை சாறில் அமுக்கரா கிழங்கை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும். உணர்வு நரம்புகளும் வலுப்பெறும்.

துயிலிக் கீரை சாறில் அமுக்கரா சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும்.

பாற்சொரிக்கீரையைப் பொடியாக நறுக்கி, சப்பாத்தி மாவுடன் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்தி செய்து சாப்பிட்டால் உடல் வலிமை உண்டாகும்.

எடை குறைய

பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

காசினிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

குப்பைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.

நல்வேளைக் கீரையை பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

நச்சுக்கொட்டைக் கீரைச் சாறில் பாதி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.

முள்ளிக் கீரை சாறில் கொள்ளை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு வேளை கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் பருமன் குறையும்.

வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

எலும்பு ஜூரம்

புளிச்சக்கீரை, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் எலும்பு ஜூரம் தணியும்.

கட்டி

புளிச்சக்கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை உடைந்துபோகும்.

கொத்தமல்லியை, நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி, வீக்கம் மற்றும் கட்டிகள் மீது கட்டினால், அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பழுத்து உடைந்து, புண் எளிதில் ஆறிவிடும்.

நல்வேளைக் கீரையை அரைத்து கட்டிகள் மீது கட்டினால் அவை பழுத்து, உடைந்து, சீழ் பிடிக்காமல் குணமாகிவிடும்.

துத்திக்கீரை சாறு எடுத்து, பச்சரிசி மாவைக் கலந்து கட்டிகள் மீது பற்றுப்போட்டால், அவை பழுத்து உடைந்து விரைவில் ஆறும்.

கணையக் கோளாறு

காசினிக் கீரை, சிறுகுறிஞ்சான் இலை இரண்டையும் சம அளவில் உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் கணையக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.

கண்கள் அழகு பெற

ஆப்பிள் பழத்தை நறுக்கி, சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும். சில வாரங்களுக்குச் சாப்பிட வேண்டும். அதன் பிறகு உங்கள் கண்கள் அழகு பெறுவதோடு சிறந்த ஒளியையும் பெறும்.

கண் நோய்கள் தீர

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) வரை சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி கண்கள் மீது வைத்துக் கட்டினால் கண் நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகக் தயாரித்து தலையில் தடவிக் குளித்தால் கண் புகைச்சல், கருவிழி நோய், கண் அழுத்தம், உடல் சூடு, வெட்டைச் சூடு போன்ற அனைத்துப் பிரச்னைகளும் சரியாகும்.

பாலக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்களுக்கு கடைசலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கண் தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.

கண் புகைச்சல்

சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப்பாகச் செய்து சாப்பிட்டால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம் போன்றவை குணமாகும்.

கப நோய்கள்

அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுரையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும்.

சிறு கீரையுடன் சிறிது சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் கப நோய்கள் விலகும்.

முருங்கைக் கீரைச் சாறில் மிளகு, அதிமதுரம் இரண்டையும் ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், கப நோய்கள், இருமல், காச நோய்கள் அனைத்தும் தீரும்.

கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.

துயிலிக் கீரை, தூதுவளை இலை இரண்டையும் சம அளவில் அரைத்துச் சாப்பிட்டால் கப நோய்கள் குணமாகும்.

கர்ப்பப்பை கோளாறுகள்

சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.

கல்லீரல் நோய்கள்

பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

பருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

கறிவேப்பிலை, நாவல் மர இலை, கீழாநெல்லி மூன்றையும் விழுதாக அரைத்து பாலில் கலக்கிச் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சார்ந்த பாதிப்புக்கள் குணமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், இரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

முள்ளங்கிக் கீரை சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

கைப்பிடி அளவு சுக்காங் கீரையை எடுத்து அதில் சீரகம் (20), சின்ன வெங்காயம் (1) சிறிது எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புக்கள், மஞ்சள் காமாலை போன்றை குணமாகும்.

கழிச்சல்

துத்திக் கீரையை சாறு பிழிந்து (15 மிலி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல் நோயும் குணமாகும்.

காச நோய்

முசுமுசுக்கைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், காச நோய் குணமாகும்.

காது நோய்

தூதுவளைக் கீரையை காய வைத்து பொடியாக்கி தினமும் சாப்பிட்டால், காது தொடர்பான நோய்கள் அனைத்தும் சரியாகும்.

முடக்கத்தான் கீரைச் சாறில் சில துளிகளைக் காதில் விட்டால் காது வலி குணமாகும்.

நல்வேளைக் கீரைச் சாறை ஓரிரு துளிகள் காதில் விட்டுக்கொண்டால், காது வலி குணமாகும்.

காதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா?

அது மாதிரி சமயங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை அவுன்ஸ் உப்பைப் போட்டுக் கரைத்து, அதைக் காதில் கொஞ்சம் விட வேண்டும். உடனே உள்ளே சென்ற பூச்சி வெளியே வந்துவிடு•. அப்படி வராவிட்டால் காதைச் சாய்க்கவும். தண்ணீரோடு அவை செத்து விழும்.

காமம்

அரைக்கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா கலவிச் சுகம் உண்டாகும்.

முருங்கைக் கீரைச் சாறில் ஜாதிக்காயை உடைத்து ஊற வைத்து எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவில் 2கிராம் சாப்பிட்டால், காம உணர்வு அதிகரித்து கலவிச் சுகம் உண்டாகும்.

புளிச்சக்கீரையை குடை மிளகாய், கசகசா சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவு இச்சை உண்டாகும். போகத்தில் அளவில்லா திருப்தி உண்டாகும்.

வெங்காயத் தாள், ஓரிதழ்த் தாமரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் விந்தின் சூடு குறையும். உடலுறவில் நீடித்த இன்பம் கிடைக்கும்.

வெங்காயத் தாளை அரைத்து, அதில் ஒரு கிராம் ஜாதிக்காய் பொடியைக் கலந்து சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

வெந்தயக் கீரையுடன் குடை மிளகாய், கசகசா, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

முள்ளங்கீரை சாறில் நெருஞ்சில் முள்ளை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காமம் அதிகரிக்கும்.

கொடிப்பசலைக் கீரையுடன் இரண்டு குடை மிளகாய், ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து வேக வைத்து கடைந்து சாப்பிட்டால், உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.

குப்பைக்கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம் நீடிக்கும். காம உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும்.

கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் (2 கிராம்) காம உணர்வு அதிகரிக்கும்.

முக்குளிக் கீரையுடன், குடை மிளகாய் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடலுறவில் அதிக ஆர்வம் ஏற்படும்.

முக்குளிக் கீரைச் சாறில் தென்னம்பாளை அரிசியை அரைத்துச் சாப்பிட்டால், நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.

முக்குளிக் கீரையுடன் சிறிது லவங்கம், பட்டை ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மை பெருகும். காம உணர்வு அதிகரிக்கும்.

முக்குளிக் கீரை, நெருஞ்சி முள் இரண்டையும் பாலில் போட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

காயம்

அகத்திக்கீரையை அரைத்து ஆறாத, நாள்பட்ட காயங்கள் மீது தடவினால், அவை விரைவில் ஆறும்.

காய்ச்சல்

அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, சாற்றை வடித்து, சாதத்தில் கலந்து காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.

முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.

அகத்திக்கீரை சாற்றை மூக்கில் பிழிந்துவிட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.

புதினா இலையை (50 கிராம்) கஷாயமாகச் செய்து தினமும் 30 மிலி முதல் 50 மிலி வரை குடித்து வந்தால் கடுமையான காய்ச்சலும் குணமாகும்.

கொத்தமல்லியோடு சிறிது மஞ்சள், மிளகு சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குளிர்க்காய்ச்சில் குணமாகும்.

கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனே குணமாகும்.

புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.

கால் ஆணி

பிண்ணாக்குக் கீரையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து, கால் ஆணிகளில் போட்டால் அவை மறையும்.

கால் வீக்கம்

புளிச்சக்கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால், கால் வீக்கம் குணமாகும்.

பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கால் வீக்கம் குணமாகும்.

குடல் கிருமிகள் ஒழிய

வங்கார வள்ளைக் கீரைச் சாறில் வாய்விளங்கத்தை அரைத்துச் சாப்பிட்டால் குடல் கிருமிகள் ஒழியும்.

குடல் புண்

முளைக்கீரையை சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும்.

வெங்காயத் தாள், துத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.

வெந்தயக் கீரையுடன் சிறிது உளுந்தைத் தட்டிப்போட்டு கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

உலர்ந்த பிரண்டை இலையை (100 கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு (10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் அளவில் சாப்பிட்டால் குடல் புண், தொண்டைப் புண், ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.

அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.

நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் குடல்புண்கள் ஆறும்.

முள்ளிக்கீரையைச் சுத்தம் செய்து பருப்பு சேர்த்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.

பரட்டைக் கீரையைப் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் குடல் புண்கள் குணமாகும்.

குடல் புழுக்கள்

மணலிக் கீரை சாறில் வாய்விளங்கத்தை (2) அரைத்து இரவில் சாப்பிட்டால் குடல் புழுக்கள் சாகும்.

குழந்தை வளர்ச்சி

முளைக்கீரையை தொடர்ந்து 40 நாட்களுக்கு குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்ல உயரமாக வளர்வார்கள்.

குளிர் ஜன்னி

ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10), திப்பிலி (3), மஞ்சள் நான்கு சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டால், சளி இருமல் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு அற்புதமான மருந்து இது.

குஷ்ட நோய்கள்

வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதின்னாப்பாலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட குஷ்ட நோய்களும் குணமாகும்.

கைகால் எரிச்சல்

பருப்புக் கீரை, உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் கைகால் எரிச்சல் குணமாகும்.

கொழுப்பு கரைய

பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பு கரையும்.

பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

தூதுவளைக் கீரைச் சாறை 30 மிலி அளவில் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.

டெங்கி

கொசுக்களின் மூலம் பரவும் வைரஸ்களினால் டெங்கிக் காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கி மோசமாகும்பொழுது உள்ளுறுப்புக்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. நவீன மருத்துவத்தில் டெங்கிக்கு மருந்து கிடையாது. ஆனால் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் டெங்கியை அம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு எளிதில் குணப்படுத்துகிறார்கள்.

அம்மான் பச்சரிசி வெறும் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமாக கழுவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி இலையை ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு இந்த நீரை ஆற வைத்து வடிகட்டி குடிக்கவும். 24 மணி நேரத்திற்கு நோயாளி இந்த அம்மான் பச்சரிசி நீரை மட்டும் குடித்து வர வேண்டும்.

சரும நோய்

பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து, அக்கி மற்றும் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் நிவாரணம் பெறலாம்.

புளிச்சக்கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் கரப்பான் போன்ற தோல் நோய்கள் தீரும்.

அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது பற்றுப்போட்டால் பூரண குணம் கிடைக்கும்.

கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப் பூசினால், படை, சொறி, சிரங்கு ஓன்ற தோல் நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் கீரைச் சாறில் சிறிது மஞ்சள் தூள் கலந்து படை, சொறி, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் குணம் பெறலாம்.

அம்மான் பச்சரிசி கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரைச் சாறில் பரங்கிப்பட்டையை ஊற வைத்து, உலர்த்தி பாலில் வேக வைத்து மீண்டும் உலர்த்திப் பொடியாக்கிக் கொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் சாப்பிட்டால் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்.

ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல், படை, கரும்படி போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

படை, கரப்பான் போன்ற தோல் நோய்கள் மீது பண்ணைக் கீரையை அரைத்துப் பற்றுப்போட்டால் அவை குணமாகும்.

பரட்டைக் கீரையை அரைத்து சொரி, சிரங்குகள் மீது தடவினால் அவை குணமாகும்.

பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப் பயன்படுத்தினால் படை, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

சளி

சளித்தொல்லையைப் போக்க மிளகு தேங்காய்ப்பால் துணை புரியும்.
தேவையான பொருட்கள்: மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி, கருப்பட்டித்தூள் 2 மேஜைக்கரண்டி, தண்ணீர் ஒரு டம்ளர், கெட்டியான தேங்காய்ப்பால் அரை டம்ளர்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூள், கருப்பட்டித்தூள், தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இது பாதியாக வற்றியதும் இறக்கி தேங்காய்ப் பாலை விட்டுக் கலந்து பரிமாறவும். இது 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் சளித்தொல்லை போய்விடும். தேங்காய்ப்பாலுக்கு சளியைப் போக்கும் தன்மை உண்டு. அதனுடன் மிளகும் சேர்வதால் உடம்புக்கு நல்லது. மிளகுக் காரம் வேண்டாம் என்றால் மிளகைப் பொடிக்காமல் நன்றாக வறுத்து கொதிக்கவிட்டு வடிகட்டி அருந்தலாம்.

ஒரு கைப்பிடி அளவுக்குப் புதினா இலை, மிளகு (3) இரண்டையும் விழுதாக அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.

வெங்காயத் தாளை அரைத்து அதில் திப்பிலியைக் கலந்து காய வைத்துப் பொடியாக்கவும். அரை கிராம் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.